இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர் சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி ஆய்வு மைய பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ‘அட்லஸ் – வி’ என்ற ராக்கெட் மூலம் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயணம் ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த மாதம் மீண்டும் பயணம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், ஆக்ஸிஜன் குழாய் சேதம் காரணமாக மீண்டும் பயணம் தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் வெற்றிகரமாக சுனிதா வில்லியம்ஸ் மற்றும் ஆராய்ச்சியாளர் புட்ச் வில்மோர் ஆகியோர் விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.