ஆந்திராவில் தெலுங்கு தேசக்கட்சி வெற்றி கொண்டாட்டத்தின்போது தொண்டர் மீது டிராக்டர் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திராவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சி பெருவாரியான வாக்குகள் பெற்றது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக கோதாவரி மாவட்டம் மல்பூர் கிராமத்தில் அக்கட்சித் தொண்டர்கள் டிராக்டர் ஓட்டி மகிழ்ந்தனர்.
அப்போது டிராக்டர் ஏறி தொண்டர் ஒருவருக்கு இரண்டு கால்களிலும் முறிவு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.