ஈரோடு அருகே கோவில் உண்டியலை உடைத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
புதூர் பகுதியில் உள்ள முனியப்பன் கோயிலை, வழக்கம் போல் பூசாரி திறக்க வந்த போது உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
40 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.