மத்திய சென்னையில் பாஜக 27 சதவிகித வாக்குகளை பெற்றுள்ள நிலையில்,இதனை 40 சதவிகிதமாக உயர்த்துவோம் என,பாஜக மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் பி செல்வம் தெரிவித்துள்ளார்.
மத்திய சென்னை தொகுதி எம்.பி தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில், பாஜக மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் பி செல்வம் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்கள் எத்தனை முறை திமுகவுக்கு வாக்களித்தாலும் திமுக, மக்களை ஏமாற்றத்தான் போகிறது என குற்றம் சாட்டினார்.
பொய்கள் மூலமாக திமுக 40 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.