தென்காசியில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை நடைபெற வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
பாவூர்சத்திரம் ஆட்டு சந்தையில் ஏராளமான ஆடுகள் விற்பனை நடைபெற்று வருகிறது. பிற மாநிலங்களில் இருந்து ஆடுகள் கொண்டு வரப்படுவதால் பொதுமக்கள் ஆடுகளை வாங்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
5 ஆயிரம் ரூபாய் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனை நடைபெற்றுவருவதால் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை நடைபெற வாய்ப்புள்ளதாக சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர்.