கடலூர் மாவட்டம் வடலூரில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.
மேல கொளக்குடி கிராமத்தை சேர்ந்த ராஜவர்மன் தனது நண்பரான தமிழ்செல்வனுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சேத்தியாதோப்பு அருகே சாலையை கடக்க முயன்றபோது எதிரே வந்த தோமினிக் வின்சென்ட் ராஜ் என்பவரது இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ராஜவர்மன் உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.