குடியாத்தம் அருகே குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டம், காந்தி கணவாய் கொல்லிமேடு பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வனப்பகுதியை ஒட்டி உள்ள விவசாய நிலங்களில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், வனப்பகுதியை ஒட்டி உள்ள பகுதிகளில் ஒற்றை சிறுத்தை ஒன்று உலா வருவதாகவும், இதனால் கால்நடைகள் மேச்சலுக்கு அழைத்துச் செல்ல அச்சமாக உள்ளதாகவும், எனவே, சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.