ஆந்திரா மாநிலத்தில் தனியார் தங்கும் விடுதியின் பெயர் பலகையில் இருந்த சாதி பெயரை அகற்றக்கோரி வன்முறையில் ஈடுபட்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
குண்டூரில் உள்ள லட்சுமிபுரத்தில் தனியார் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த மர்ம கும்பல் விடுதியின் பெயர்பலகையில் உள்ள சாதி பெயரை அகற்றக்கோரி விடுதியில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர்.
மேலும் விடுதி உரிமையாளரை மண்டியிட வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.