உதகையில் பரவலான மழை பெய்துவரும் நிலையில் மலை ரயில் முன்பு சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
தமிழகத்தின் சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதனைத்தொடர்ந்து நீலகிரி மாவட்டம் உதகையில் பரவலான மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
மேலும், உதகைக்கு சுற்றுலா வந்த மக்கள் உதகை மலை ரயில் முன்பு செல்பி எடுத்துச் சென்றனர்.