திண்டுக்கல் மாவட்டம், பழனியில் பாலாறு-பொருந்தலாறு அணையிலிருந்து பாசன வசதிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
பாலாறு – பொருந்தலாறு அணையில் இருந்து தாடாகுளம் இரண்டாம் போக நெல் சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், அணையிலிருந்து புன்செய் பாசனத்திற்காக வினாடிக்கு 15 கன அடி வீதம் தாடாகுளம் கால்வாய் வழியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இதனால் பாலசமுத்திரம், ஒட்டனைபுதூர், தாமரைக்குளம், கரிக்காரம்புதூர் உள்ளிட்ட 10 கிராமங்களிலுள்ள 501 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.