கோடை மழை காரணமாக தஞ்சையில் பல ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் மூழ்கி உள்ளாகவும், இதனால், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கோடை சாகுபடி செய்யப்பட்டு, தற்போது மாவட்ட முழுவதும் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அம்மாப்பேட்டையில் கடந்த 10 நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள், கோடை மழையால் பாதிக்கப்பட்டு, விளைநிலத்தில் சாய்ந்து சேதம் அடைந்துள்ளது என்றும், இதனால், பயிர்கள் முளைக்க தொடங்கியள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
எனவே, வேளாண்மை துறை அதிகாரிகள் இப்பகுதியில் உடனே ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.