புதுச்சேரியில் பைக் சர்வீஸ் சென்டரில் இருந்து 15 ஆயிரம் ரூபாயை மர்ம நபர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகளை போலீசார் வெளியிட்டு அந்த நபரை தேடி வருகின்றனர்.
புதுச்சேரி, கடலூர் சாலை முதலியார்பேட்டை பகுதியில் உள்ள பைக் சர்வீஸ் சென்டர் பூட்டப்பட்டதும், கையில் பையுடன் வந்த மர்ம நபர் லாவகமாக ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே சென்றார்.
பின்னர், திருப்புலி மூலமாக கல்லாப் பெட்டியை திறந்து அதில் இருந்த 15 ஆயிரம் ரூபாயை எடுத்துச் சென்றுள்ளார்.
இந்த காட்சிகள் அனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த நபரை தேடி வருகின்றனர்