தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே வீடு கட்டுமானப் பணியின்போது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்தார்.
குருக்கள்பட்டி கிராமத்தில் புதியதாக கட்டி வரும் வீட்டில் எலக்ட்ரீசியன் ஆனந்த் என்பவர் பிளம்பிங் வேலையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில், ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் படுகாயமடைந்த கருப்பசாமி, உயிருக்கு ஆபத்தான நிலையில், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.