சென்னை ராயபுரத்தில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட நபர், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
ராயபுரத்தைச் சேர்ந்த குமார், கடந்த 6-ம் தேதி தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் வெளியே நிறுத்திவிட்டு உறங்கச் சென்றுள்ளார்.
பின்னர் மீண்டும் காலையில் எழுந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தை காணாமல் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ராயபுரம் போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் திருட்டில் ஈடுபட்ட சாய்ராம் என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.