நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே காலில் காயத்துடன் சுற்றித் திரிந்த சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.
பொன்வயல் அருகே உள்ள சுனில் என்பவருக்கு சொந்தமான காபி தோட்டத்தில், கடந்த ஒரு வாரமாக சிறுத்தை ஒன்று நடமாட முடியாமல் உலா வந்துள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர், சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து தேயிலைத் தோட்டத்தில் பதுங்கி உள்ள சிறுத்தையை பிடிக்க கூண்டுகள் அமைத்திருந்தனர்.
இந்நிலையில் கூண்டில் சிறுத்தை சிக்கியதையடுத்து, கால்நடை மருத்துவர் உதவியுடன் சிகிச்சையளிக்க வனத்துறையினர் முயன்று வருகின்றனர்.