காவலர்கள் குறைதீர் முகாமில், தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் பங்கேற்று நேரடியாக மனுக்களை பெற்றார்.
சென்னை காவல் ஆணையரகத்திற்குட்பட்டு பணியாற்றும் காவலர்களுக்கான குறைதீர் முகாமானது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில் நடைபெற்றது.
காவலர்கள், தங்களது பணியிட மாறுதல், வீட்டு வசதி, குழந்தைகள் படிப்பு, மருத்துவ வசதிகள் உள்ளிட்ட குறைதீர் மனுக்களை டிஜிபி சங்கர் ஜிவாலிடம் வழங்கினர். இந்த கூட்டத்தில், பெருநகர சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.