குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் கரடியால் கடையம் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தென்காசி மாவட்டம், கடையம் பகுதியில் வசிக்கும் சிகாமணி என்பவரது வீட்டிற்கு முன்பு கரடி ஒன்று மாம்பழத்தை தின்று கொண்டிருந்ததாக அப்பகுதியில் தகவல் வேகமாக பரவியது. இதனால், “ஊருக்குள் உலா வரும் கரடியால் தங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது” என்றும், எனவே, “கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்” என வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.