தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தொழில் போட்டியால் இருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
காந்திநகரைச் சேர்ந்த மீன் வியாபாரி வெள்ளத்துரை மற்றும் சாமி ஆகிய இருவரையும், மர்மநபர்கள் மீன் கடையில் வைத்து வெட்டியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், கொலையாளிகள் அரசு பேருந்தில் மதுரைக்கு தப்பிச் செல்வது தெரியவந்தது.
இதனையடுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடிய சேர்மக்கனி, மாரி ராஜ் மற்றும் கார்த்திக் ஆகிய மூவரையும் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.