பிரபல நடிகையும், இமாச்சல பிரதேசம் மண்டி நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவருமான கங்கனா ரனாவத்தை தாக்கிய பெண் காவல் மீது மொகாலி விமான நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சண்டிகர் விமான நிலையத்தில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை பெண் காவலர் குல்வீந்தர் கவுர் கன்னத்தில் அறைந்ததாக நடிகை கங்கனா ரனாவத் குற்றம்சாட்டியிருந்தார். இதனையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.