மகாராஷ்டிராவின் தென்பகுதி, தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கரின் தென் பகுதியில் வழக்கத்தை விட முன்கூட்டியே தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளது.
அதன்படி மகாராஷ்டிராவில் மும்பை உள்பட அரபிக்கடலை ஒட்டியுள்ள பகுதியில் அடுத்த 3 நாட்கள் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழையால் அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நிற்கிறது.