மக்களவையில் கிரிமினல் எம்பிக்கள் அதிர்ச்சி ரிப்போர்ட்!
Sep 18, 2025, 02:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களவையில் கிரிமினல் எம்பிக்கள் அதிர்ச்சி ரிப்போர்ட்!

Web Desk by Web Desk
Jun 9, 2024, 09:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

18வது நாடாளுமன்றத்துக்கு தேர்வான உறுப்பினர்களில் 251 பேருக்கு எதிராக குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றும், 27 உறுப்பினர்கள் குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. அது குறித்த ஒரு செய்தி தொகுப்பு .

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் 18வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடந்தன. மொத்தம் 543 இடங்களுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன.
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. பிரதமர் மோடி மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமர் ஆகி இருக்கிறார்.

இந்த முறை, நாடாளுமன்றத்துக்குத் தேர்வாகி உள்ள உறுப்பினர்கள் தேர்தல் பிராமண பத்திரங்களில் வழங்கியுள்ள தகவல்களின் அடிப்படையில்,ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது .

குற்றப் பின்னணி கொண்ட மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை, 2009 ஆம் ஆண்டு 125 ஆகவும் , 2014 ஆம் ஆண்டு 185 ஆகவும், 2019ம் ஆண்டு 233 ஆகவும் தேர்தலுக்குத் தேர்தல் அதிகரித்து வருகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு, 543 உறுப்பினர்களில் 46 சதவீதம் அதாவது, 251 உறுப்பினர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன என்றும், 27 உறுப்பினர்கள் தண்டனை பெற்ற குற்றவாளிகள் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

2009ம் ஆண்டில் இருந்ததை விட, இது 124 சதவீதம்அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 18 வது மக்களவை உறுப்பினர்களில் 170 பேர் மீது கொலை,கொலை முயற்சி,ஆள் கடத்தல் , கொள்ளை,பாலியல் வன்கொடுமை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றம் எனத் தீவிர குற்ற வழக்குகளில் விசாரணையில் உள்ளனர் என்றும், இது மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 31 சதவீதமாகும்.

கொலை வழக்குகளில் 4 பேரும் , கொலை முயற்சி வழக்கில் 27 பேரும், கடத்தல் வழக்குகளில் 4 பேரும், வெறுப்பு பேச்சு தொடர்பான வழக்குகள் 43 பேரும், பெண்களுக்கு எதிரான வழக்குகளில் 15 பேரும், அதில் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 4 பேரும் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்ற வழக்குடைய ஒருவருக்கு, மக்களவை தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் 15.3 சதவீதமாகவும், எந்த குற்ற வழக்கும் இல்லாத ஒருவருக்கு வெற்றி வாய்ப்பு, வெறும் 4.4 சதவீதமாக உள்ளது என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

ஏற்கெனவே ஒரு பொதுநல வழக்கு விசாரணையின் போது, அரசியலில் குற்றவாளிகளின் தலையீட்டைத் தடுப்பது தொடர்பாக , மத்திய அரசுக்கு ஏற்கெனவே 1997,1998 ஆம் ஆண்டுகளில் பரிந்துரைகள் அனுப்பப்பட்டன என்றும், ஆனால்,அது சம்பந்தமான அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும், தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

மேலும், மீண்டும் நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றும் படி சொல்லாமல் உச்சநீதிமன்றமே உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் வேண்டுகோள் வைத்திருந்தது.

அரசியலில் குற்றவாளிகள்,குற்ற வழக்கை எதிர்கொள்பவர்கள் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கும் வகையில் கடுமையான சட்டத்தை இயற்ற வேண்டும் என்று வலியுறுத்திய, உச்ச நீதிமன்றம், குற்றம் சாட்டப் பட்டவர்களைக் கட்சியில் இருந்தும் நீக்க சட்டம் இயற்ற வேண்டும் என்றும் கூறியிருந்தது.

மேலும், ஊழல்வாதிகளாலும், குற்றவாளிகளாலும் இந்திய அரசியலின் ஆணிவேர் பட்டுப் போய்க் கொண்டிருக்கிறது.சமீப காலமாக குற்றவாளிகள் அரசியலில் ஈடுபடுவது, தேர்தலில் போட்டியிடுவது அதிகமாகி வருகிறது. இந்த போக்கு மக்களாட்சியின் மாண்புகளைக் குலைத்து விடும் என்ற அச்சம் ஏற்படுகிறது என்றும் உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Tags: Shock report of criminal MPs in Lok Sabha!
ShareTweetSendShare
Previous Post

ஜெகன்மோகன் ரெட்டி படுதோல்வி ஏன்?

Next Post

ரத்த தானம் செய்ய வேண்டும்: சேவா பாரதி தமிழ்நாடு சார்பில் விழிப்புணர்வு மாரத்தான்!

Related News

தெலுங்கானா : வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு!

விருதுநகர் : பட்டாசு ஆலை வெடிவிபத்தில் இரண்டு பேர் உயிரிழப்பு!

கழிவுநீரால் நிரம்பி வழியும் சாலைகள் : சொந்த வீடுகளை விட்டு வெளியேறும் மக்களின் அவலம்!

திருவண்ணாமலை : தனியார் பள்ளிகளுக்கு ஒதுக்க வேண்டிய தொகையை ஒதுக்காத தமிழக அரசு – மாணவர்கள் அவதி!

திருவண்ணாமலை மாட வீதிகளில் நிறுத்தப்பட்டிருந்த தேர்கள் மாற்று இடத்தில் நிறுத்தம்!

சீர்காழி அரசு மருத்துவமனையில் ஊசி போட்ட கர்ப்பிணிகள் உட்பட 36 பேருக்கு உடல்நலம் பாதிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்த ரோபோ சங்கர்!

நெல்லை : வாலிபரை கார் பேனட்டில் வைத்து இழுத்துச் சென்ற எஸ்எஸ்ஐ பணியிடை நீக்கம்!

கரூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழா : அரசு பேருந்துகள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் சிரமம்!

கள ஆய்வுக்கு சென்ற தமிழ் ஜனம் செய்தியாளர் குழுவை தாக்க முற்பட்ட திமுக பிரமுகர்

சட்டப்பேரவையில் வெளியிட்ட 256 திட்டங்களை கைவிட தமிழக அரசு முடிவு – அண்ணாமலை கண்டனம்!

ஏழை மக்களுக்காக அன்னதான திட்டத்தை தொடங்கிய லாரன்ஸ்!

சட்டப்பேரவையில் வெளியான 256 அறிவிப்புகள் சாத்தியமில்லை : கைவிட தமிழக அரசு முடிவு!

பிரதமர் மோடியை வாழ்த்தி AI வீடியோ!

புர்ஜ் கலிஃபாவில் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து!

இட்லி கடை படத்தின் ’என் பாட்டன் சாமி’ பாடல் வெளியீடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies