கேரள மாநிலம் கோழிக்கோடு தளி மகா சிவன் கோயிலில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரார்த்தனை செய்தார்.
திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபி சுமார் 70ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதனையடுத்து அவர் மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. சுற்றுலாத்துறை இணை அமைச்சராக நேற்று பொறுப்பேற்ற அவர், இன்று கேரளா திரும்பினார்.
அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கோழிக்கோடு தளி மகா சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.