சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் குலுங்கிய சம்பவத்திற்கு இழப்பீடு தொகையாக 20 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்து அந்நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் கடந்த 21-ந் தேதி லண்டனிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட போது நடுவானில் பயங்கரமாக குலுங்கியது, இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த நிலையில், இழப்பீடு தொகையாக 20 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தது. அதன் படி அந்த தொகையை விமான நிறுவனம் ஒதுக்கீடு செய்துள்ளது.