காங்கிரஸ் தலைவர்கள் பேச்சு! : வெடித்த கோஷ்டி பூசல்!
Nov 7, 2025, 01:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸ் தலைவர்கள் பேச்சு! : வெடித்த கோஷ்டி பூசல்!

Web Desk by Web Desk
Jun 12, 2024, 01:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூச்சல், குழப்பத்தால், கட்சியின் உறுப்பினர்கள் அரங்கத்தை விட்டு வெளியேறினர். உறுப்பினர்கள் கொந்தளிக்கும் வகையில் தலைவர்கள் கூட்டத்தில் என்ன பேசினார்கள்? சலசலப்புக்கு யார் காரணம்? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்…!

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படுவதாக கூறினாலும், பா.சிதம்பரம், ஈவிகேஎஸ் இளங்கோவன், கே.வீ.தங்கபாலு, கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட தலைவர்கள் தனது ஆதரவாளர்களுடன் தனித்தனியாக செயல்பட்டு வருவது கடந்த கால சம்பவங்கள் அம்பலப்படுத்தியுள்ளன.

அந்தவகையில், சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழுக் கூட்டத்தில், தலைவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், உறுப்பினர்கள் அதிருப்தியடைந்து கூட்டத்தில் வெளியேறிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

மக்களவை தேர்தவில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் விதமாகவும், கட்சியின் அடுத்த கட்ட நிலைப்பாடு குறித்து விவாதிப்பது தொடர்பாகவும் காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் , தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள், மற்ற அணிகளின் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர். ஆரம்பத்தில் நன்றாக சென்று கொண்டிருந்த கூட்டம், இடையில் தலைவர்கள் பேச தொடங்கியதும் பூகம்பம் வெடித்தது.

முதலில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகையோ, தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி எத்தனை ஆண்டுகள் தான் பிற கட்சிகளை சார்ந்து இருப்பது என்றும், எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் என்றும் தெரிவித்தது சலசலப்பை ஏற்படுத்தியது.

செல்வந்பெருந்தகையின் பேச்சிற்கு முரணாக உரையாற்றிய தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று இருப்பதற்கு திமுகவும் , திமுக தலைவர் ஸ்டாலினும் தான் காரணம் என்றும், அதை மறக்க கூடாது என்றும் தெரிவித்தார். தனித்து நின்று டெபாசிட் கூட வாங்க முடியாமல் இருந்தோம் என அவர் பேசியதால் சர்ச்சை வெடித்தது.

முன்னாள், இந்நாள் தலைவர்களின் கருத்து மோதலால் கொந்தளித்த உறுப்பினர்கள், பொதுக்குழு கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி பேசாமல் திமுகவிற்கு நன்றி கூறிக் கொண்டிருக்கிறீர்களே என கேள்வி எழுப்பியபடி அரங்கை விட்டு வெளியேறினர்.

இந்தப் பிரச்சனை ஒருபுறம் இருக்க, காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை அணியின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் மகாத்மா காந்திக்கு பெரியார் எழுதிய கடிதம் குறித்து பேசினார். அப்போது, கூட்டத்திலிருந்த ஒருவர் காந்தி அப்படியெல்லாம் கூறவில்லை என குரல் எழுப்பியபோது, தன்னிடம் வீடியோ ஆதாரம் இருப்பதாக பீட்டர் அல்போன்ஸ் பதிலளித்தால் பரபரப்பு நிலவியது.

மேலும், பொதுக்குழு கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு சாப்பாடு பரிமாறுவதிலும், உறுப்பினர்களிடையே மோதல் வெடித்ததுடன், உறுப்பினர்கள் உணவு வழங்க தாமதம் ஏற்பட்டதால், டேபிளை தள்ளிவிட்டு அங்கிருந்தும் கிளம்பினார்.

கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக கூடிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழு கூட்டம் தலைவர்களின் கருத்து வேறுபாட்டாலும், உறுப்பினர்களின் மனக்கசப்பாலும் முடிந்தது. மேலும், இந்த கூட்டத்தில் காங்கிரஸ் எம்பி-க்கள் கார்த்தி சிதம்பரம் மற்றும் மாணிக்கம் தாகூர் பங்கேற்காதது உறுப்பினர்கள் மத்தியில் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. மாநில கட்சி தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியால் அவர்கள் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.

Tags: Kong. Leaders talkvolunteers protest erupted party conflict!
ShareTweetSendShare
Previous Post

விவிஐபி பாதுகாப்பு : கருப்பு பூனைப்படை விடுவிப்பு?

Next Post

வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலி!

Related News

தொடரும் இந்தியாவின் அசத்தல் : செமிகண்டக்டர் உற்பத்தி சீனாவை முந்துகிறது!

உலகளாவிய உற்பத்தியில் வேகமான வளர்ச்சி – இந்தியாவை ஏற்றுமதி தளமாக மாற்றும் பன்னாட்டு நிறுவனங்கள்!

விண்வெளித்துறையில் தொடங்கும் புதிய அத்தியாயம் : அயராத முயற்சியால் ஆச்சரியப்படுத்தும் இந்தியா!

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் மங்கள்யான்-2 : விண்வெளியில் உச்சம் மற்றொரு சாதனைக்கு தயாராகும் இந்தியா!

உலகை மிரட்டும் S-500 Prometey : இந்தியாவுடன் இணைந்து தயாரிக்க ரஷ்யா முடிவு!

டிரம்பின் வரிவிதிப்பு சட்டப்படி சரியானதா? : அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் கேள்வியால் வெடித்த சர்ச்சை!

Load More

அண்மைச் செய்திகள்

“பயனர்களின் உரிமையை பாதுகாக்க போராட்டம்” – AMAZON Vs PERPLEXITY மோதும் ஜாம்பவான்கள்!

ஒன்று கூடிய பாக். பயங்கரவாதிகள் : இந்தியா மீது மீண்டும் தாக்குதல் நடத்த சதித்திட்டம்!

ட்ரம்ப் வரி விதிப்பால் உயர்ந்த விலைவாசி – திணறும் அமெரிக்கர்கள்!

“பூர்வி” கூட்டு ராணுவ பயிற்சி நடத்தும் முப்படைகள் – சீன எல்லையில் வலிமையை வெளிப்படுத்தும் இந்தியா!

ரயில் டிக்கெட் எடுப்பது EASY : பயணிகளை நாடி வரும் M -UTS சகாயக் திட்டம்!

பாதுகாப்பு படையினரிடம் தன்னிச்சையாக சரணடைந்த நக்சலைட்!

கடன் வாங்கி திட்டங்களை செயல்படுத்துகிறது திமுக அரசு – நயினார் நாகேந்திரன்

மேலூரில் கண்மாயின் வடிகாலை மர்ம நபர்கள் உடைத்ததால் கழிவு நீருடன் வெளியேறிய தண்ணீர்!

ஆந்திர அரசுப் பேருந்தில் தீ விபத்து!

கொள்ளிடம் ஆற்றில் கொட்டப்படும் குப்பைகள் – சுகாதார சீர்கேடு நிலவுவதாக பொதுமக்கள் புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies