வியட்நாமின் ஹா ஜியாங் மாகாணத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.
கடந்த சில நாட்களாக ஹா ஜியாங் பகுதியில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.
இதில் 2 ஆயிரத்து 500 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனைதொடர்ந்து அங்குள்ள மக்கள் மாற்று இடத்தில் தங்க வைக்கப்பட்டு வரும் நிலையில் மழை வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடரில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.