முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமில் நுழைந்த மக்னா யானையை வனத்துறையினர் அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்டினர்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் மக்னா ஆண் யானை ஒன்று நுழைந்தது.
இதனால், சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்தனர். வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி, மக்னா யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனால் சுற்றுலா பயணிகள் நிம்மதி அடைந்தனர்.