தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் ஜூன் 20-ஆம் தேதி தொடங்கி 29-இல் நிறைவடையும் என பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார்.
அலுவல் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல் நாளான ஜூன் 20-இல் மட்டும் காலை 10 மணிக்கு சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கும் என்றும், மற்ற நாள்களில் காலை 9.30 மணிக்கே கூட்டம் ஆரம்பித்துவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.
கூட்டத்தொடர் காலை, மாலை என இருவேளையாக நடைபெறும் என்று கூறிய அவர், காலை 9.30 முதல் பிற்பகல் 1.30 மணிவரை முதல் அமர்வும், அதன்பின்னர் மாலை 5 முதல் இரவு 8 மணிவரை அடுத்த அமர்வும் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
விவாதமின்றி ஒரு மசோதா கூட நிறைவேற்றப்படாது என்றும் பேரவைத் தலைவர் அப்பாவு உறுதியளித்துள்ளார்.