பழனி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக 2.55 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து காணிக்கை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதில் 2 கோடியே 55 லட்சத்து 37 ஆயிரத்து 740 ரூபாய் ரொக்கம் கிடைத்துள்ளது.
மேலும், 965 கிராம் தங்கம், 29 ஆயிரத்து 158 கிராம் வெள்ளி, மற்றும் 574 வெளிநாட்டு நோட்டுகளும் காணிக்கையாக பெறப்பட்டுள்ளது.