வேலூர் மாவட்டம் கருகம்புத்தூர் அருகே பழுதாகி நின்ற லாரி மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
செங்கல்பட்டு நோக்கி சென்றுகொண்டிருந்த லாரி கருகம்புத்தூர் அருகே பழுதாகி நின்றது. அப்போது அவ்வழியாக வந்த தனியார் பேருந்து லாரியின் பின்பக்கத்தில் மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 15 பேரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.