நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக தமிழக பகுதிக்கு முல்லை பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கடந்த 1-ஆம் தேதி அணையிலிருந்து பாசனத்துக்கு 200 கனஅடி, தேனி மாவட்ட குடிநீருக்கு 100 கனஅடி என 300 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கபட்டது.
அணையில் இருந்து கூடுதலாக தற்போது 511 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு 317 கனஅடி நீர்வரத்து உள்ளது. அணையின் நீர்மட்டம் 118.95 அடி, கொள்ளளவு 2 ஆயிரத்து 439 மில்லியன் கனஅடியாக உள்ளது.