தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நபரை குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
கொண்டாநகரம் பகுதியை சேர்ந்த ரமேஷ் தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில், தொடர் வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவை உள்ளது.
இதையடுத்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் பரிந்துரையின் பேரில் ரமேஷை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதனையடுத்து ரமேஷை கைது செய்து குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.