திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தாழ்வாக செல்லும் மின்கம்பியை மாற்றக்கோரி புகாரளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
35வது வார்டுக்கு உட்பட்ட நேதாஜி நகர், முத்துமாரியம்மன் கோயில் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள மின்கம்பத்தில் இருந்து செல்லும் மின்கம்பிகள் தாழ்வாக செல்வதால் விபத்து நேரிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காமல் மின்வாரிய அதிகாரிகள் அலட்சியப்போக்குடன் செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.