உத்திரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயில் அடங்கிய ஃபைசாபாத் தொகுதியில் பாஜகவின் தோல்வி, மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த தோல்வியின் பின்புலம் குறித்து இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்…!
7 கட்டங்களாக நாடு முழுவதும் நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டது.
இந்ததேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் INDI கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்றது . INDI கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
பாஜக தலைமையிலான கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றி இருந்தாலும், உத்தரப் பிரதேச மாநிலம் ராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியை உள்ளடக்கிய ஃபைசாபாத் தொகுதியில் பாஜக தோல்வி அடைந்தது.
அயோத்தி கோயிலை முன்னிலைப் படுத்தி நாடு முழுவதும் பாஜக பிரசாரம் மேற்கொண்ட நிலையில், அக்கோயில் அடங்கிய ஃபைசாபாத் தொகுதியில் தோல்வியை சந்தித்தது.
பாஜக வேட்பாளர் லல்லு சிங்கை விட 54,567 வாக்குகள் அதிகம் பெற்று சமாஜ்வாதி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் லல்லு சிங் 4,99,722 வாக்குகளையும், சமாஜ்வாதி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் 5,54,289 வாக்குகளையும் பெற்றனர். 80 மக்களவைத் தொகுதி உடைய உத்திரப்பிரதேசத்தில், பாஜக 33 இடங்களில் வெற்றி பெற்றது.
உத்திரப்பிரதேசத்தில் பாஜக செய்த மக்கள் நலத்திட்டத்தால் 33 இடங்களில் வெற்றி பெற முடிந்தது. மேலும், இந்த முறை காங்கிரஸ் உடன் சமாஜ்வாதி கட்சி கூட்டணி அமைத்த காரணத்தால் தான், அக்கட்சி அதிக இடங்களில் வெல்ல முடிந்தது, இல்லை என்றால் பாஜக வென்று இருக்கும் என்று தெரிவிக்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
மேலும் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் பாஜகவிற்கு எதிராக பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது. ஆனால் பாஜக இவற்றை எல்லாம் தவிர்த்து மக்களுக்கு தனது சேவையை தொடர்ந்து வருகிறது.
பல ஆண்டுகளாக பாஜக கொடுத்து வந்த வாக்குறுதியின்படி, அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. அங்கு குவியும் மக்களின் எண்ணிக்கையே அதற்கு சாட்சியாக உள்ளது.
பிரதமர் மோடியின் நல்லாட்சி தொடங்கிய நிலையில், வருகின்ற 5 ஆண்டில் இந்தியா பொருளாதாரத்தில் மூன்றாவது இடத்தை பிடிக்கும் என்பது நிதர்சனமான உண்மை…!