திருச்சி விமான நிலையத்தில் பாஸ்போர்ட்டில் திருத்தங்கள் செய்த மூவர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள புதிய முனையத்தில், பெரம்பலூர் மாவட்டம் லாடபுரத்தைச் சேர்ந்த சந்திரசேகர், ராமநாதபுரம் மாவட்டம் பட்டினம் காத்தானைச் சேர்ந்த சீனி பாஷா மற்றும் மலேசியாவில் இருந்து திருச்சி வந்த, பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரைச் சேர்ந்த மதுரை வீரன் ஆகியோரது பாஸ்போர்ட்டுகளை விமான நிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது பாஸ்போர்ட்டில் பிறந்த தேதி மற்றும் தந்தை பெயரை மாற்றி, திருத்தம் செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து மூவரும் விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.