ஜெகன்மோகன் ஆட்சியின்போது, திருப்பதியில் கஞ்சா, மது மற்றும் அசைவ உணவின் கூடாரமாக மாறிவிட்டதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.
ஆந்திர முதலமைச்சராக பொறுப்பேற்ற சந்திரபாபு நாயுடு, நேற்று திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின்போது, திருப்பதி கோயில் வணிகமயமாக்கப்பட்டுள்ளதாகவும், இனி கோவிலில் வழங்கப்படும் பிரசாதம் தரமானதாகவும், விலை ஏற்றப்படாமலும் இருக்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும், கள்ள சந்தையில் தரிசன டிக்கெட் விற்பனை செய்யப்படுவது முற்றிலும் தடுக்கப்படும் எனவும் சந்திரபாபு நாயுடு உறுதியளித்தார்.