தைவான் நாட்டு எல்லைக்குள் சீனா போர் விமானம் பறந்ததால் பதற்றமான சூழல் நிலவியது. சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்து கடந்த 1949 ஆம் ஆண்டு தைவான் தனி நாடாக பிரிந்தது.
ஆனால் தற்போது வரை தைவான் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி எனவும், தைவானுடன் தூதரகம், வணிகம் என எந்த தொடர்பும் பிற நாடுகள் வைக்கக்கூடாது என சீன அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சீனாவின் போர்விமானங்கள் தைவான் எல்லையில் பறந்து சென்றது. இந்த நிகழ்விற்கு தைவான் அதிபர் லாய் சிங்-தே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்