விமானப் போக்குவரத்தை அனைவரும் பயன்படுத்தக் கூடியதாக மாற்றுவதே தங்களது நோக்கம் என மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
தாம் செல்லும் இடமெல்லாம் விமானக் கட்டணம் அதிகமாக இருப்பது குறித்து பொதுமக்கள் முறையிடுவதாகவும், ரயில் பயணத்தைப் போல விமானப் பயணத்தையும் எளிதாக்க விரும்புவதாகவும் ராம் மோகன் நாயுடு குறிப்பிட்டார்.