வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே 1650 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்களை காவல்துறையினர் அழித்தனர்.
வேலூரில் கள்ளச்சாராயம் நடமாட்டத்தை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் மற்றும் குழுவினர் மாமரத்து பள்ளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆங்காங்கே இருந்த ஆயிரத்து 650 லிட்டர் கலாச்சாராய ஊரல்களை காவல்துறையினர் அழித்தனர்.