பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தொடங்கியுள்ளதால் நிதி அமைச்சக அலுவலகங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை மூன்றாவது வாரத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்போது, 2024 – 2025 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார்.
இதனையடுத்து பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தொடங்கியுள்ள நிலையில், நிதி அமைச்சகம், தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு பார்வையாளர்கள், வெளியாட்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.