ஜம்மு காஷ்மீரில் உள்ள ஜே.கே.வங்கிகளில் ஏராளமான பக்தர்கள் அமர்நாத் யாத்திரை செல்ல பதிவு செய்து வருகின்றனர்.
அனந்த்நாக் மாவட்டத்தில் 12, 756 அடி உயரத்தில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக ஏராளமான பக்தர்கள் செல்கின்றனர்.
இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூன் 29ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 19ஆம் தேதி நிறைவடைகிறது. இந்நிலையில் ஜே & கே வங்கியின் அனைத்து கிளைகளிலும் அமர்நாத் யாத்திரைக்கான பதிவு ஏப்ரல் 15 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.