குவைத் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த தமிழர்கள்! - உடலை பார்த்து கதறி அழுத உறவினர்கள்!
Mar 19, 2026, 02:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குவைத் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த தமிழர்கள்! – உடலை பார்த்து கதறி அழுத உறவினர்கள்!

Murugesan M by Murugesan M
Jun 15, 2024, 11:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குவைத் தீ விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

குவைத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் தமிழர்கள் 7 பேர் உட்பட 50க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பலியாகினர். சென்னை ராயபுரத்தை சேர்ந்த சிவசங்கர் என்பவர் உடல் கருகி பலியாகிய நிலையில் அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது உடலை பார்த்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதேபோல, தீ விபத்தில் சிக்கி தூத்துக்குடியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரும் உயிரிழந்தார். இவரது உடலும் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் வானரமுட்டி கிராமத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் உடலை பார்த்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் மாரியப்பனின் உடலுக்கு பல அமைப்பினர் அஞ்சலி செலுத்திய நிலையில் இடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

திருச்சியை சேர்ந்த ராஜிஎபினேஷன் என்பவர் குவைத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்த நிலையில், அவரும் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தார். கேராளாவில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் திருச்சிக்கு எடுத்து வரப்பட்ட ராஜிஎபினேஷனின் உடல் சொந்த ஊரான நவல்பட்டு பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலை கண்டு உறவினர்கள் கதறி அழுதனர். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி அரசால் வழங்கப்பட்ட 5 லட்சத்திற்கான காசோலையை வழங்கி ஆறுதல் கூறினார். இதையடுத்து அவரது உடல் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

தீ விபத்தில் உயிரிழந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த கருப்பணன் ராமுவின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான தென்னவனூருக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலை பார்த்து உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுத நிலையில், இறுதி சடங்குகள் நடத்தி கருப்பணன் ராமுவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

குவைத் கொடூர தீவிபத்தில் சிக்கி தஞ்சையை சேர்ந்த புனாப் ரிச்சர்ட் ராய் உயிரிழந்த நிலையில் அவரது உடல் அமரர் ஊர்தி மூலம் சொந்த ஊரான ஆதனூர் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. உடலை பார்த்து பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் கதறி அழுதனர். அப்போது அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் உள்ளிட்டோர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து புனாப் ரிச்சர்ட் ராயின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கடலூர் மாவட்டம், முட்டம் பகுதியைச் சேர்ந்த சின்னதுரை என்பவர் குவைத்தில் பணியாற்றி வந்த நிலையில் அவரும் தீ விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை பெற்று கொண்ட குடும்பத்தினர் கதறி அழுத காட்சி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இதனையடுத்து சின்னதுரையின் உடமைகள் மற்றும் இறப்பு சான்றிதழ் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கபட்டது.

Tags: Tamils ​​killed in Kuwait fire accident! - Relatives who cried after seeing the body!
ShareTweetSendShare
Previous Post

அடுத்தடுத்து 10 வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை!

Next Post

ஊருக்குள் புகுந்த சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பு!

Related News

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies