குவைத் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த தமிழர்கள்! - உடலை பார்த்து கதறி அழுத உறவினர்கள்!
Aug 24, 2025, 08:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குவைத் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த தமிழர்கள்! – உடலை பார்த்து கதறி அழுத உறவினர்கள்!

Web Desk by Web Desk
Jun 15, 2024, 11:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குவைத் தீ விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

குவைத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் தமிழர்கள் 7 பேர் உட்பட 50க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பலியாகினர். சென்னை ராயபுரத்தை சேர்ந்த சிவசங்கர் என்பவர் உடல் கருகி பலியாகிய நிலையில் அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது உடலை பார்த்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதேபோல, தீ விபத்தில் சிக்கி தூத்துக்குடியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரும் உயிரிழந்தார். இவரது உடலும் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் வானரமுட்டி கிராமத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் உடலை பார்த்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் மாரியப்பனின் உடலுக்கு பல அமைப்பினர் அஞ்சலி செலுத்திய நிலையில் இடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

திருச்சியை சேர்ந்த ராஜிஎபினேஷன் என்பவர் குவைத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்த நிலையில், அவரும் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தார். கேராளாவில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் திருச்சிக்கு எடுத்து வரப்பட்ட ராஜிஎபினேஷனின் உடல் சொந்த ஊரான நவல்பட்டு பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலை கண்டு உறவினர்கள் கதறி அழுதனர். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி அரசால் வழங்கப்பட்ட 5 லட்சத்திற்கான காசோலையை வழங்கி ஆறுதல் கூறினார். இதையடுத்து அவரது உடல் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

தீ விபத்தில் உயிரிழந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த கருப்பணன் ராமுவின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான தென்னவனூருக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலை பார்த்து உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுத நிலையில், இறுதி சடங்குகள் நடத்தி கருப்பணன் ராமுவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

குவைத் கொடூர தீவிபத்தில் சிக்கி தஞ்சையை சேர்ந்த புனாப் ரிச்சர்ட் ராய் உயிரிழந்த நிலையில் அவரது உடல் அமரர் ஊர்தி மூலம் சொந்த ஊரான ஆதனூர் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. உடலை பார்த்து பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் கதறி அழுதனர். அப்போது அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் உள்ளிட்டோர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து புனாப் ரிச்சர்ட் ராயின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கடலூர் மாவட்டம், முட்டம் பகுதியைச் சேர்ந்த சின்னதுரை என்பவர் குவைத்தில் பணியாற்றி வந்த நிலையில் அவரும் தீ விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை பெற்று கொண்ட குடும்பத்தினர் கதறி அழுத காட்சி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இதனையடுத்து சின்னதுரையின் உடமைகள் மற்றும் இறப்பு சான்றிதழ் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கபட்டது.

Tags: Tamils ​​killed in Kuwait fire accident! - Relatives who cried after seeing the body!
ShareTweetSendShare
Previous Post

அடுத்தடுத்து 10 வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை!

Next Post

ஊருக்குள் புகுந்த சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பு!

Related News

புதிய உச்சத்தில் நட்புறவு : இந்திய ஏற்றுமதிக்கு ரஷ்யா க்ரீன் சிக்னல் – சிறப்பு கட்டுரை!

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies