இந்திய ஏற்றுமதி: வரலாறு காணாத வளர்ச்சி!
Jan 14, 2026, 01:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய ஏற்றுமதி: வரலாறு காணாத வளர்ச்சி!

Murugesan M by Murugesan M
Jun 15, 2024, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகளாவிய பொருளாதார மந்த நிலைக்கு மத்தியிலும் இந்திய ஏற்றுமதி துறை ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி அடைந்து வருகிறது.  கடந்த மே மாதம் இந்தியாவின் ஏற்றுமதி 9.1 சதவீதம் அதிகரித்து புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது.
இது குறித்து ஒரு செய்தி தொகுப்பு.

இந்தியாவின் ஏற்றுமதி கடந்த 2020-2021 ஆம் ஆண்டில் 498 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 2022 -2023 ஆம் ஆண்டில் 770 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்தது. இந்த இரண்டாண்டுகளில் 24 சதவீத வளர்ச்சியைத் தொட்டது.

நடப்பாண்டில் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களாக இந்தியாவின் ஏற்றுமதி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் முன்னோட்டமாக, கடந்த மே மாதம் இந்தியாவின் ஏற்றுமதி 38.13 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.

பொறியியல் , எலக்ட்ரானிக்ஸ், மற்றும் மருந்து தயாரிப்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஏற்றுமதி இரட்டை இலக்க வளர்ச்சியை அடைந்திருக்கிறது.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில், பெட்ரோலியப் பொருட்கள், போக்குவரத்து சார்ந்த உபகரணங்கள், தாவர எண்ணெய் வகைகள் மற்றும் வெள்ளி ஆகியவைகளின் ஏற்றுமதி மிகவும் அதிகரித்துள்ளது. அதேசமயம், இந்தியாவின் இறக்குமதி வர்த்தகம் 7.7 சதவீதம் குறைந்திருக்கிறது.

ஜவுளி போன்ற துறைகளில் ஏற்பட்ட மந்தநிலை மாறி, இத்துறைகளின் ஏற்றுமதி, 9.8 சதவீத வளர்ச்சியைக் கண்டிருப்பதாக கூறிய மத்திய அரசின் வர்த்தக செயலாளர் சுனில் பார்த்வால், வளர்ந்த நாடுகளில் பணவீக்கம் குறைந்து வருவதால், அந்நாடுகளில் உள்ள மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்து உள்ளது என்றும் தெரிவித்திருக்கிறார்.

கடந்த ஆண்டில், உலக அளவில் அதிக பணவீக்கம், அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள் மற்றும் மந்தமான நுகர்வோர் தேவை, காரணமாக உலக வர்த்தகத்தில் ஒரு மந்தநிலை ஏற்பட்டது. அது தற்போது படிப்படியாக மாறி வருகிறது.

பெட்ரோலியப் பொருட்களின் ஏற்றுமதி 15.75 சதவீதமும், பொறியியல் பொருட்கள் 7.39 சதவீதமும் எலக்ட்ரானிக் பொருட்கள் 22.97 சதவீதமும் மருந்து மற்றும் மருத்துவ உபகரனங்களின் ஏற்றுமதி 10.45 சதவீதமும் உயர்ந்துள்ளதாக அதிகார பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கச்சா எண்ணெய் இறக்குமதி 28 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், தங்கம் இறக்குமதி குறைந்திருக்கிறது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கல் வகைகள் மற்றும் நகைகள், கடல் பொருட்கள், இரும்பு தாது, முந்திரி மற்றும் எண்ணெய் உணவுகள் ஆகியவற்றின் ஏற்றுமதி பெரும் சரிவைக் கண்டிருக்கின்றன. ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளின் சந்தைகளில், சில இந்திய மசாலாப் பொருட்கள் திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து, மசாலாப் பொருட்களின் ஏற்றுமதியும் வீழ்ச்சியைக் கண்டிருக்கின்றன.

அமெரிக்கா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மலேசியா மற்றும் இங்கிலாந்து ஆகிய ஐந்து நாடுகளுக்கான ஏற்றுமதியில் இந்தியா அதிக அளவில் வளர்ச்சியைப் பதிவு செய்திருக்கிறது.

‘ஆத்ம நிர்பர்’ என்ற கொள்கைக்கு ஏற்ப,உலகளாவிய வர்த்தகத்துடன் ஒருங்கிணைக்க ஒவ்வொரு இந்திய மாநிலத்தையும் ஊக்குவித்து ,மேம்படுத்திய மத்திய அரசின் நடவடிக்கைகளால், இந்தியாவின் ஏற்றுமதித் துறை ஆச்சரியப் படத் தக்க வளர்ச்சியைக் கண்டு வருகிறது.

வரும் 2030ஆம் ஆண்டுக்குள் 2 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்என்ற இலக்கை இந்திய ஏற்றுமதி துறை தொடும் என்கிறார்கள் வர்த்தகம் மற்றும் தொழில்துறை வல்லுநர்கள்.

Tags: Indian exports: unprecedented growth!
ShareTweetSendShare
Previous Post

பிஎம் கிசான் திட்டம்: ஜூன் 18-இல் ரூ.20,000 கோடி விடுவிப்பு!

Next Post

அப்பாவின் தாலாட்டு!

Related News

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

Load More

அண்மைச் செய்திகள்

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies