விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதையொட்டி, சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக எடப்பாடி கே. பழனிசாமி அறிவிததுள்ளார்.
அதில், திமுகவினர் ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதோடு, பண பலம், படை பலத்துடன் பல்வேறு அராஜகங்களை கட்டவிழ்த்து, மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள் என குற்றம்சாட்டியுள்ளார்.
இதனால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அந்த அறிக்கையில் எடப்பாடி கே. பழனிசாமி கூறியுள்ளார்.