கங்கை தசராவை ஒட்டி வடமாநிலங்களில் ஏராளமான பக்தர்கள் கங்கை நதியில் புனித நீராடி வழிபட்டனர்.
கங்கை தேவி பூமியில் அவதரித்த நாளை, கங்கை தசராவாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், கங்கை நதியில் புனித நீராடி வழிபட்டால், பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகமாக உள்ளது.
இதனை ஒட்டி, உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள கங்கை ஆற்றில், பக்தர்கள் புனித நீராடி வழிபட்டனர். இதேபோன்று, பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நீராட அதிகாலை முதலே ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.
அயோத்தியிலுள்ள சரயு நதியில் புனிய நீராடிய பக்தர்கள் ராமர் கோயிலில் வழிபாடு செய்தனர். இதனால் அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.