சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு லண்டனில் பொதுமக்கள் யோகாசனம் செய்தனர்.வரும் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் லண்டனில் உள்ள டிராஃபல்கர் சதுக்கத்தில் இந்திய உயர் ஸ்தானிகராலயம் சார்பில் யோகா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில், ஏராளமானோர் பங்கேற்று பல்வேறு விதமாந ஆசனங்களை செய்தனர். அப்போது பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் அனைவரும் பயிற்சி மேற்கொண்டது காண்போரை வியப்படைய வைத்தது.