ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரியாசியில் அண்மையில் பேருந்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். தோடா மாவட்ட குடியிருப்பு பகுதி, கதுவா மாவட்ட ராணுவ முகாம்களையும் பயங்கரவாதிகள் தாக்கினர். இதில், துணை ராணுவப் படை வீரர் ஒருவர் பலியானார். இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலின் எதிரொலியாக டெல்லியில் உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் அமித் ஷா ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து, அமர்நாத் யாத்திரை தொடங்குவதை முன்னிட்டு, ஜூன் 16-ம் தேதி உயர்நிலைக் குழு கூட்டத்துக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற ஜம்மு காஷ்மீர் நிலவரம் குறித்து அமித் ஷா ஆலோசனை நடத்தினார். நார்த் பிளாக்கில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா, உள்துறை செயலாளர் அஜய் பல்லா, ராணுவ தளபதி மனோஜ் பாண்டே உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.