மாவீரன் வாஞ்சிநாதனின் தன்னலமற்ற துணிச்சல், விடுதலைப் போராட்டத்துக்கு புது உத்வேகம் அளித்தது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
நாட்டு விடுதலைக்காக, இளம் வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, அடக்குமுறையைக் கையாண்ட ஆங்கிலேய ஆட்சியாளர் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்று, தேச விடுதலைக்காக தன்னுயிரையும் கொடுத்த மாவீரன் வாஞ்சிநாதன் அவர்கள் நினைவு தினம் இன்று.
வாஞ்சிநாதன் அவர்களின் தன்னலமற்ற துணிச்சல், விடுதலைப் போராட்டத்துக்கு புது உத்வேகம் அளித்தது என்றால் அது மிகையாகாது. அவர் வீரத்தையும், புகழையும் போற்றி வணங்குகிறோம்