டெல்லிக்கு குடிநீர் கொண்டு செல்லும் குழாய் உள்ள பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனை கண்டித்து பாஜகவினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது குடிநீர் வாரிய அலுவலகம் சூறையாடப்பட்டது. இதனையடுத்து டெல்லிக்கு குடிநீர் செல்லும் குழாய் செல்லும் பகுதிகளில் பாதுகாப்பு அளிக்க கோரி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி டெல்லி காவல்துறை ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதனையடுத்து ராட்ச குழாய் செல்லும் பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.