ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேற்றத்துக்காக உழைத்த ஒப்பற்ற தலைவர் ஐயா எம்.சி.ராஜா எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
கல்வியாளர், எழுத்தாளர், கவிஞர் என பன்முகம் கொண்ட தலைவர், சமூகப் புரட்சியை முன்னெடுத்த புரட்சியாளர் ஐயா எம்சி ராஜா அவர்களின் பிறந்த தினம் இன்று.
ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேற்றத்துக்காக உழைத்த ஒப்பற்ற தலைவர் ஐயா எம்.சி.ராஜா அவர்கள் புகழைப் போற்றி வணங்குகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.