சபரிமலையில் ரோப் கார் அமைக்கும் திட்டத்திற்கு மத்திய வனம் மற்றும் சுற்றுப்புறச்சூழல் துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பம்பையில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரோப் கார் அமைக்க தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது.
ரோப் கார் செல்லும் பாதையில் 40 மீட்டர் முதல் 70 மீட்டர் உயரத்திற்கு, 5 இடங்களில் டவர்கள் அமைக்கப்படவுள்ளன.
இந்நிலையில் 80 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த ரோப் காரானது பக்தர்கள் பயன்பாட்டிற்கு அல்ல என்றும், பொருள்களை கொண்டு செல்ல மட்டும் பயன்படுத்தப்படும் என்றும் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.